ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான படங்களில், அனைத்து பாடல்களையும் எழுதி வந்தார் வைரமுத்து.ஆனால், இளையராஜா, வைரமுத்துவுக்கு இடையிலான நட்பில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. அதன்பின் பிரிந்த அவர்கள், இப்போது வரை இணையவில்லை. இருப்பினும், சமீபத்தில் இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய இளையராஜாவை, 'கங்காரு' படத்தின் ஆடியோ விழாவில், வாழ்த்தி பேசினார் வைரமுத்து.அப்போது, 'தமிழ் சினிமாவின் அடையாளமான ஆருயிர் நண்பர் இளையராஜா, நம் பாரம்பரிய மண்வாசனை இசையை, வெள்ளை மாளிகைக்கும், அப்பால் ஒலிக்க வைத்தவர்' என்று அவரது பெருமைகளை மேடையில் கூறியதுடன், 'அவர் இன்னும், பல ஆண்டுகளுக்கு, நம் மண்வாசனை இசையை தந்து கொண்டேயிருக்க வேண்டும்' என்றார்.