தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆந்திராவில், கிளாமர் ஹீரோயினாக வலம் வந்த பிந்து மாதவியை, புடவை, பாவாடை - தாவணி என, குடும்ப இமேஜை ஏற்படுத்தும் உடைகளை அணிய வைத்து, அழகு பார்த்து கோலிவுட்.ஆனால், பிந்து மாதவியோ, 'எனக்கு கிராமத்து படங்கள் வேண்டாம்' என்கிறார். 'நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே நகர கலாசாரத்தில் தான். அதனால், அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறேன்' என கூறி வருகிறார்.
தற்போது, 'சபாஷ் மாப்ள, தமிழில் எண் 1ஐ அழுத்தவும், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' படங்களில் நடித்து வரும் அவருக்கு, அவரின் ஆசைப்படியே, நகரத்து கதைகள் கிடைத்துள்ளன. அதிலும், 'தமிழில் எண் 1ஐ அழுத்தவும்' என்ற படத்தின் பெயர், புதுமையாக இருப்பதால், அந்த படத்துக்கு, ரசிகர்களிடம், நல்ல வரவேற்பு கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறார், பிந்து மாதவி.மேலும், கிராமத்து கதைகளிலிருந்து, நகரத்து கதைகளுக்கு மாறியுள்ள பிந்து மாதவி, கவர்ச்சிகரமான வேடங்கள் கிடைத்தால், தெலுங்கைப் போன்று, தமிழிலும் நடித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாராக உள்ளாராம்.