ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலி இப்போது பாகுபாலி என்ற 16 நூற்றாண்டில் நிகழ்ந்த சரித்திர கதையை படமாக்கி வருகிறார். பிரபாஸ்-அனுஷ்கா, தமன்னா நடிக்கிறார்கள்.
அவரைத் தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரும் ஒரு சரித்திர படத்தை இயக்குகிறாராம். தற்போது விக்ரம்-எமிஜாக்சனை வைத்து ஐ என்ற படத்தை இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து மலையாள நடிகர் மம்மூட்டியை பிரதான கதாபாத்திரமாக வைத்து அந்த படத்தை இயக்குகிறாராம்.
புராணக்கதைகளில் ஷங்கரை அதிகம் பாதித்த கதாபாத்திரம் கர்ணனாம். அதனால் கர்ணனை மையமாக வைத்து ஒரு சரித்திர கதையை தயார் பண்ணி விட்ட அவர், அதில் கர்ணனாக நடிக்க பொருத்தமான நடிகர் யார் என்று பரிசீலனை செய்தபோது மம்மூட்டிதான் மனக்கண்ணில் வந்து நின்றாராம். ஏற்கனவே பழஸிராஜாவில் மம்மூட்டியின் பிரமாதமான நடிப்பை பார்த்த ஷங்கர், இன்றைய நிலையில் கர்ணன் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியை தவிர சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது என்றும் கருதி, அவரிடம் பேசி வைத்துள்ளாராம்.
ஆக, மோகன்லாலைத் தொடர்ந்து மம்மூட்டியும் தமிழில் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.