ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வைரமுத்துவைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை கவிஞர்கள் ஏராளமானோர் சினிமாவில் பட்டெழுத வந்து விட்டார்கள். வைரமுத்துவின் மகன்களான கார்க்கி, கபிலன் ஆகியோர் கூட பாடல்கள் எழுதி வருகிறார்கள். ஆனால் இந்த நிலையிலும் தன்நிலை மாறாமல் வழக்கம்போல் தரமான பாடல்களாக எழுதிக்கொண்டிருக்கிறார் வைரமுத்து. குறிப்பாக, சாமி இயக்கியுள்ள கங்காரு படத்தில் மொத்த பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவில் வைரமுத்துவின் பாடல்களின் தரம் பற்றி அனைவரும் பெருமையாக பேசினர். அதோடு, படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் ஸ்ரீனிவாஸ், வைரமுத்துவையே நான் இசையமைக்கும் அனைத்து படங்களுக்கு பாடல் எழுத வைப்பேன் என்று பேசினார்.
ஆனால் அவரைத் தொடர்ந்து பேசிய வைரமுத்து, ஆரம்பத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எல்லா இசையமைப்பாளர்களுமே என்னைத்தான் தேடி வருவார்கள். ஆனால், ரெண்டு மூன்று படங்களுக்குப்பிறகு வேறு பாடலாசிரியர்கள் பக்கம் திரும்பி விடுவார்கள். அந்தவகையில், அஜீத், சூர்யா உள்பட இன்றைக்கு முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களின் ஆரம்ப கால படங்களுக்கு நான்தான் பாடல் எழுதினேன். அந்த பாடல்களும் அவர்களுக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது. ஆனால், பின்னர் அவர்களும் என்னை பிரிந்திருக்கிறார்கள். சினிமாவில், இதுமாதிரி நான் நிறைய பார்த்து விட்டேன்.
அதனால், பாடகர் ஸ்ரீனிவாசும் மற்றவர்களை மாதிரிதானா? இல்லை வேறு மாதிரியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.