Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜே.சி.டேனியலுக்கு தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் கண்ணீர்

28 டிச, 2013 - 17:46 IST
எழுத்தின் அளவு:

மலையாள சினிமா உலகின் தந்தை ஜே.சி.டேனியல். தமிழரான இவர் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர். விகிதகுமாரன் என்ற முதல் மலையாள சலனப்படத்தை எடுத்தவர். தாழ்ந்த ஜாதி பெண்ணை உயர்ஜாதி பெண்ணாக நடிக்க வைத்ததால் கேரள உயர்ஜாதி சமூகத்தால் துரத்தியடிக்கப்பட்டவர். கடைசிகாலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி இறந்தார். படத்தில் நடித்த ஹீரோயின் ஜாதி வெறியர்களால் துரத்தப்பட்டு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. சமீபத்தில்தான் ஜே.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தை என்று கேரள அரசு அறிவித்தது.

அவரது கதையை செல்லுலாயிட் என்ற பெயரில் கமல் இயக்கினார். கேரளாவில் பெரும் பெற்றி பெற்ற இந்தப் படம் 7 மாநில விருதையும், ஒரு தேசிய விருதையும் பெற்றது. இந்தப் படத்தை யோகராஜ் பாலசுப்பிரமணியம் என்பவர் தமிழில் ஜே.சி.டேனியல் என்ற பெயரில் டப் செய்து சென்ற 27ந் தேதி வெளியிட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் தியேட்டர் கிடைக்காததால் வெளியீட்டை வருகிற ஜனவரி 3ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.

படம் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இடைவெளியில் தயாரிப்பாளர் பாலசுப்பிரமணியம் கண்ணீர் மல்க பேசியதாவது: ஒரு தமிழர் மலையாள சினிமாவின் தந்தையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பற்றி தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை பல லட்சங்கள் செலவு செய்து டப் செய்திருக்கிறோம். இது மற்ற டப்பிங் படங்கள் போல் அல்லாமல் நவீன தொழில்நுட்ப வசதி மூலம் வசனத்திற்கேற்ப வாயசைவை மாற்றும் டெக்னிக் மூலம் டப் செய்து ஒரிஜினில் படம்போலவே மாற்றி இருக்கிறோம். மலையாளத்தில் பணியாற்றிய அத்தனை டெக்னீசியன்களும் இதில் வேலை செய்திருக்கிறார்கள். நான் எனது நண்பர்கள் வீடு நிலங்களை விற்று இதனை செய்திருக்கிறோம்.

ஆனால் இதை ஒரு சாதாரண டப்பிங் படம்போல (ஷகிலா படம் மாதிரி) நினைத்து எங்களுக்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். ஒரு நல்ல நோக்கத்திற்காக நல்ல சினிமாவை கொண்டு வந்துள்ள நாங்கள் இன்று திக்கு தெரியாமல் நின்று கொண்டிருக்கிறோம். என்றார்

இந்த நிகழ்ச்சிக்க ஜே.சி.டேனியலின் கடைசி மகன் 75 வயது ஹாரிஸ் டேனியல் வந்திருந்தார். அவர் பேசியதாவது: என் தந்தையை அவர் வாழும் காலத்தில் நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. மலையாள சினிமா அவரை புரிந்து கொண்டு கவுரப்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். சினிமா எடுக்குறேன் என்று எங்கப்பா அத்தனை சொத்துக்களையும் அழித்தார். அதனால் அவர் மீது எங்களுக்கு கோபம் இருந்தது. இப்போது அவரை உணரும்போது அவர் இல்லை. அவர் படத்தை தமிழக மக்கள் ஆர்வத்தோடு பார்ப்பதுதான் தமிழக மக்கள் அவருக்குச் செய்யும் மரியாதை என்றார்.

1932ம் ஆண்டு ஜே.சி.டேனியல் விகித குமாரனை திருவனந்தபுரத்தில் முதன் முதலாக திரையிட்டபோது அங்கு கலவரம் வெடித்தது. அப்போது அவர் அதே தியேட்டரில் கண்ணீர் வடித்தார். 80 ஆண்டுகளுக்கு பிறகு ஜே.சி.டேனியல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அதே போன்று தியேட்டரில் நின்று கண்ணீர் வடிக்கிறார்.

காலம்தான் மாறியிருக்கிறதே தவிர தயாரிப்பாளரின் கண்ணீர் மாறவில்லை.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Vaal Payyan - Chennai,இந்தியா
30 டிச, 2013 - 13:42 Report Abuse
Vaal Payyan என்ன பண்றது .. விளம்பரம் இருந்தால் குப்பை கூட காசுக்கு விக்கலாம் ... விளம்பரம் இல்லா விட்டால் வைரம் கூட குப்பையில் தான் ...
Rate this:
jayakumar - chennai,இந்தியா
30 டிச, 2013 - 11:07 Report Abuse
jayakumar படம் பார்க்க ஆசையாக இருக்கிறது
Rate this:
jayakumar - chennai,இந்தியா
30 டிச, 2013 - 11:05 Report Abuse
jayakumar இந்த படத்தில் வரும் காற்றே காற்றே பாடல் சூப்பர் இந்த பாடலை கேட்டு பார்த்து சொல்லுங்கள் நண்பர்களே
Rate this:
Manikandan Subbaiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 டிச, 2013 - 10:42 Report Abuse
Manikandan Subbaiah hello சினிமாக்காரர்ர்கலீ கொஞ்சம் திரும்பி பாருங்கள்.நல்ல சினிமக்கலெய் வெறுக்காதிர்கள்.
Rate this:
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 டிச, 2013 - 00:39 Report Abuse
MRSaminathan - Thirumangalam இந்த படத்தை நாம் பார்க்காமல் போனால் ....நாம் தமிழர்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in