பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் மறுபிரவேசம் செய்தவர் நதியா. அந்த படத்திற்கு பிறகு நதியாவுக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால், கதாநாயகர்கள் அளவுக்கு சம்பளத்தை சொல்லியடித்தார். இதனால் அவரை நோக்கி படையெடுத்தவர்கள் தெறித்து ஓடிவிட்டனர். இதனால் அதன்பிறகு சுந்தர்.சியின் அத்தையாக ஒரு படத்தில் நடித்த நதியா அதன்பிறகு காணாமல் போனார்.
பின்னர் மலையாளத்துக்கு சென்று சில படங்களில் சவாலான வேடங்களில் நடித்த அவர், அங்கு கேரக்டரில் இருக்கும் திருப்தி சம்பளத்தில் இருக்காது என்பதால் மீண்டும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் சென்றநேரம், மகேஷ்பாபு நடித்த ஆக்டு என்ற படத்தில் ஒரு அக்கா வேடத்துக்கு ஆபர் இருப்பதை அறிந்த நதியா, கரைக்டாக கல்லெறிந்து அதை கேட்ச் பண்ணி விட்டார்.
அக்கா வேடம் என்றபோதும், ஹீரோ மகேஷ்பாபுவுக்கு இணையான வேடமாம். அதனால் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்ட்டுக்கு இந்த படத்தைக்கொண்டே அடித்தளம் போட்டு விட வேண்டும் என்று களத்தில் நிற்கிறாம் நதியா. அதோடு, வெயிட்டான அக்கா வேடங்களுக்கு ஆபர் இருக்கிறதா? என்பதை அறிந்து தன்னிடம் சொல்ல இரண்டு மேனேஜர்களை நியமித்து அவர்களை கம்பெனி கம்பெனியாக முடுக்கி விட்டுள்ளாராம் நதியா.