ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முதல் ரவுண்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நயன்தாரா. ஆனால், தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் அவரை சிறந்த நடிகையாக நிரூபித்தது. அதனால், இரண்டாவது ரவுண்டில் களமிறங்கியிருக்கும் அவரை பழைய ஞாபகத்தில் யாரும் பார்ப்பதில்லை. பார்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகத்தான் பார்க்கிறார்கள்.
அதனால்தான் ஆரம்பம் படத்தில் நயன்தாராவின் கையில் துப்பாக்கியை தூக்கிக்கொடுத்தார் விஷ்ணுவர்தன். அதையடுத்து, இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி ரீமேக்கான அனாமிகாவில் நயன்தாராவை அதிரடி ரோலில் நடிக்க வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அப்படத்தில் வித்யாபாலனை மிஞ்சும் வகையில் நடித்திருக்கிறார் நயன்தாரா.
அதையடுத்து, இப்போது ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கும் நயன்தாராவை புக் பண்ணிய டைரக்டர் ராஜா, அவருக்கு கராத்தே மாஸ்டர் வேடம் கொடுத்துள்ளார். இந்த கராத்தே மாஸ்டர் ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரியாகி ஹீரோவுடன் சேர்ந்து வில்லன்களை பழிவாங்குவாராம். ஆக, இப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, சண்டை காட்சிகளில் எதிரிகளை விஜயசாந்தி பாணியில் பந்தாடுகிறாராம்.