ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. அதன்பிறகு நீயா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர், பின்னர் சிவாஜி, கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் நடிகரும், நடிகை லதாவின் தம்பியுமான ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு விடை கொடுத்தார்.
ஆனால், பல வருடங்களுக்குப்பிறகு இப்போது இயக்குனராக சினிமாவில் மறுபிரவேசம் செய்திருக்கிறார் ஸ்ரீப்ரியா. அதுவும், இந்த சமுதாயத்தின் மீது எனக்கு நிறைய கோபம் உள்ளது. அந்த கோபத்தை என் படங்கள் மூலம் வெளிப்படுத்தப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவம் போன்று நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட ஸ்ரீப்ரியா, இப்போது அதேபோன்ற கதையில் மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டையம் என்ற படத்தை தற்போது தமிழில் மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் இயக்கியுள்ளார்.
இதுவரை சாப்ட்டான வேடங்களில் நடித்து வந்த நித்யாமேனன் இப்படத்தில் அதிரடியான ஆக்சன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் திரைக்கு வராதபோதும், ஸ்ரீப்ரியாவின் இந்த முயற்சியை கேள்விப்பட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அதனால், அடுத்தடுத்து இதேபோன்று சமூக களையெடுக்கும் கதைகளை தேடிப்பிடித்து ரீமேக் செய்வதில் ஆர்வமாகியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.
இந்த நிலையில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்து வெளியாகியுள்ள திரிஷ்யம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் தற்போது வாங்கியிருக்கிறாராம் ஸ்ரீப்ரியா. குடும்ப பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான கதையில் உருவாகியுள்ளதாம்.