தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மஞ்சுவாரியார். மலையாள நடிகர் திலீபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த 14 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்தவர் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு அவர் விருப்பம் தெரிவித்தபோது பல இயக்குனர்கள் சான்ஸ் கொடுக்க முன்வந்தனர்.
காரணம், பல வருட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டபோதும் அவரது உடல்கட்டு இன்னமும் இளமையாகவே இருப்பதால், முதல் ரவுண்டில் நடித்தது போலவே இப்போதும் வெயிட்டான கதாபாத்திரங்களுக்கு அவரை புக் பண்ணியுள்ளனர். இதில் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க மஞ்சுவாரியாரை அழைத்தனர்.
ஆனால், படத்தின் கதையை கேட்ட மஞ்சுவாரியார், படத்தின் கதை மோகன்லாலுவின் கேரக்டரை மட்டுமே பின்னணியாக கொண்டிருப்பதால் தனக்கு எந்தமுக்கியத்துவமும் இல்லை என்று அப்படத்திலிருந்து விலகி விட்டாராம் . காரணம், மலையாளத்தில் மஞ்சுவாரியார் எந்த படத்தில் நடித்தாலும் அவரைச்சுற்றித்தான் கதை பின்னப்பட்டு வந்ததாம். அதேபோல் செகண்ட் இன்னிங்சிலும் சில படங்களில் அப்படித்தான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
அதனால்தான் மோகன்லால் படம் என்றபோதும் தனக்கான அங்கீகாரம் அந்த படத்தில் தரப்படவில்லை என்று தாமாகவே விலகிக்கொண்டுள்ளாராம் மஞ்சுவாரியார்.