'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாரதிராஜா, இளையாராஜா, வைரமுத்து மூவர் கூட்டணி 80களில் வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தது. மூவரும் ஒரே காலகட்டத்தில் ஒரே மண்ணில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்பது ஒரு காரணம். காலப்போக்கில் பணமும், புகழும் சேர சின்ன சின்ன ஈகோ பிரச்னைகள் பெரிதாகி பிரிந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒரு மறைமுகமாக தாக்கி கொள்வார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இளையராஜா இருதய கோளாரு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். அவரைப்போய் பாரதிராஜாவோ, வைரமுத்துவோ பார்க்கவில்லை. நேற்று நடந்த கங்காரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் வைரமுத்து தன் திடீர் பாசத்தை வெளியிட்டார்.
"நம் மண்வாசனை இசையை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். நம் கலாச்சாரத்தை வெள்ளை மாளிகைகளுக்கும் அப்பால் கொண்டு சேர்த்தவர். நம் தமிழ் இசையின் அடையாளம் என் ஆருயிர் நண்பன் இளையராஜா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் பூரண உடல் நலம் பெற்று இன்னும் 30 ஆண்டுகள் தன் இசையை மண்ணுக்கு தரவேண்டும் என்ற வாழ்த்துகிறேன்" என்றார்.