ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின்னும், படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா, குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தற்காலிகமாக குட்பை சொல்லியிருந்தார். இப்போது, மகள் ஆரத்யாவை பராமரிப்பதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யாவின் தாய்ப்பாசம் குறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக, ஐஸ்வர்யா, தன்னை அர்ப்பணித்துள்ளார். மிகச்சிறந்த தாயாகவும் விளங்குகிறார்என, மனைவி மீது பாசத்தை பொழிகிறார். மேலும், தன் மகள் ஆரத்யாவை, திரையுலக வெளிச்சம் படாமல், பாதுகாக்கவும் முடிவுசெய்துள்ளார், அவர். இப்போது, ஊடகங்கள் அதிகரித்து விட்டதால் ஆரத்யாவின் போட்டோக்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ஊடகங்களின் பார்வையில் படாமல், ஆரத்யாவை பாதுகாப்புடன் வளர்ப்போம் என்கிறார்.