பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நஸ்ரியா நசீம், ஒரு முடிவுடன் தான், கேரளாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. தொப்புள் சர்ச்சைக்கு பின், அவரைப் பற்றிய, பரபரப்பான செய்திகள் வந்து, ஓய்ந்து போன நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர்,நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, அதேபோல் தான், திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என, விரும்புகிறேன். நிஜத்தில், ஆண்களுடன் அதிகம் பழகுவது இல்லை. மாடர்ன் என்ற பெயரில், கவர்ச்சியான உடைகள் அணிவது இல்லை. எனவே, திரையிலும், அதேபோல் நடிக்க வேண்டும் என்பது தான், என் விருப்பம். நையாண்டி படத்தால் ஏற்பட்ட சர்ச்சை, நான் யார் என்பதை, திரையுலகினருக்கு புரிய வைத்துள்ளது. என்னை தேடி வரும் இயக்குனர்களுக்கு எப்படிப்பட்ட கதை, காட்சிகளில் நான் நடிக்க சம்மதிப்பேன் என்பதை புரிய வைத்துள்ளது என்கிறார்.