ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நஸ்ரியா நசீம், ஒரு முடிவுடன் தான், கேரளாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. தொப்புள் சர்ச்சைக்கு பின், அவரைப் பற்றிய, பரபரப்பான செய்திகள் வந்து, ஓய்ந்து போன நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர்,நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, அதேபோல் தான், திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என, விரும்புகிறேன். நிஜத்தில், ஆண்களுடன் அதிகம் பழகுவது இல்லை. மாடர்ன் என்ற பெயரில், கவர்ச்சியான உடைகள் அணிவது இல்லை. எனவே, திரையிலும், அதேபோல் நடிக்க வேண்டும் என்பது தான், என் விருப்பம். நையாண்டி படத்தால் ஏற்பட்ட சர்ச்சை, நான் யார் என்பதை, திரையுலகினருக்கு புரிய வைத்துள்ளது. என்னை தேடி வரும் இயக்குனர்களுக்கு எப்படிப்பட்ட கதை, காட்சிகளில் நான் நடிக்க சம்மதிப்பேன் என்பதை புரிய வைத்துள்ளது என்கிறார்.