ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தற்போது கோடம்பாக்கத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பூஜை போடுவதற்கு முன்பே சேனல் ரைட்ஸ் விலைபோய் விடுகிறது. அதனால் சேனல்களிடம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டே படப்பிடிப்பை ஆரம்பித்து விடுகிறார்கள். குறிப்பாக, சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம்கூட ஒரு சேனலுக்கு விற்பனையாகி விட்டது. அதனால், அவர்கள் கொடுக்கும் தொகையை வைத்தே படத்தை முடித்துவிடப்போகிறார்களாம்.
இதேபோல், இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படமும் இப்போதே விலை பேசப்பட்டு விட்டது. அப்படத்தை தயாரிக்கயிருக்கும் ஏ.எம்.ரத்னம் ஒரு சேனலிடம் 20 கோடி தந்தால் என் படத்தை உங்களுக்கே சேனல் ரைட்ஸ் தருகிறேன் என்று ஒரு பேச்சுக்காகத்தான் சொன்னாராம். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 20 கோடிக்கே வாங்கிக்கொள்வதாக அந்த சேனல் முன்வந்துள்ளதாம்.
இதனால் உற்சாகமடைந்துள்ள ஏ.எம்.ரத்னம், இதற்கு முன்பு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்ததை விடவும், அடுத்து தயாரிக்கும் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்போகிறாராம். சேனல் ரைட்ஸே 20 கோடிக்கு போகும்போது, ஏரியா வாரியாக படம் பெரிய அளவில் வியாபாரமாகும் என்பதை இப்போதே கணித்து விட்ட அவர், முழுப்படத்தையும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்போகிறாராம்.