இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த மாதம் வரை எந்த பிரச்னையும இல்லாமல்தான் இருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால், அவர் யார் துணையும் இல்லாமல் தனித்து தங்கியிருந்த வீட்டிற்குள் மர்ம மனிதன் புகுந்து தாக்கியதை அடுத்து, இப்போது அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு ஏரியாவில் குடியேற மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில் பாதுகாப்பான இடத்தில் வீடு பார்த்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில், இதுவரை பாலிவுட் சினிமா சம்பந்தப்பட்ட மேனேஜர்கள், இயக்குனர்கள் என அனைவரது நேரடி தொடர்பில் இருந்து வந்தார் ஸ்ருதி. ஆனால், இப்போது அந்த நிலை அடியோடு மாறி விட்டது. சினிமா சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவரது தாயார் சரிகாவிடம்தான் முதலில் தொடர்பு கொள்ள வேண்டுமாம். அதன்பிறகு அவர் ஸ்ருதியிடம் பேச வைப்பாராம்.
மேலும், பெரும்பாலும், இதுவரை ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட சினிமா விசயங்களில் தலையிடாமல் இருந்த சரிகா, இனி கதை கேட்பது முதல் சம்பள பேசுவது வரை முக்கிய பங்கு வகிக்கப்போகிறாராம். கிட்டத்தட்ட அவரது கால்சீட் மேனேஜர் போலாகி விட்டார். ஆக, இப்போது அம்மாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் முழுமையாக வந்து விட்டார் ஸ்ருதி.