டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததுமே ஹன்சிகா, நயன்தாரா என்று முன்னணி ஹீரோயினிகளுடன் நடிக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்த விசயத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமாக இருக்கிறார். தான் நடிக்கிற படங்களில் இன்னமும் புதுமுகம் மட்டுமின்றி வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு சான்ஸ் கொடுத்து வருகிறார். அவர் நினைத்தால் எத்தனை பெரிய முன்னணி ஹீரோயினிகளும் அவருடன் நடிப்பார்கள். ஆனால் அவர் அதை விரும்பவிலலை.
அவருடன் ரம்மி படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா அடுத்து பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்திலும் நடிக்கிறார். அதேபோல் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் நடித்த காயத்ரி, இன்னொரு படத்திலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதனால், இந்த இரண்டு நடிகைகளுக்குமே அவர் சிபாரிசு செய்து வருவதாக செய்தி பரவிக்கிடக்கிறது.
ஆனால், இதை தடாலடியாக மறுக்கிறார் விஜய்சேதுபதி. இதுவரை நான் நடித்த படங்களில் எந்த படத்திலும் டூயட் பாடல்கள் இடம்பெற்றதில்லை. நடிகைகளை சுற்றிக்கொண்டு திரியும் கதையாக இருந்தாலும் அதில் கிளாமரோ, கிளுகிளுப்போ இல்லாத கதைகளுக்குத்தான் முதலிடம் கொடுத்து வருகிறேன். அதனால் என் படங்களில் எந்த நடிகைகள் இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
இப்போது வரை கதையும், அதில் எனக்குரிய கேரக்டரை பற்றியும்தான் நான் டைரக்டர்களிடம் கேட்கிறேன். அதேசமயம் நடிகர்களுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். ஆனால் நடிகைகளுக்கு செய்ததில்லை. இனிமேலும் அதை செய்ய மாட்டேன். என் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பேன் என்கிறார் விஜய்சேதுபதி.