தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான் சினிமா பார்த்து சினிமா எடுக்குறவன் என்று வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறினார். பிரியாணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் ஆற்றிய சுருக்கமான உரையில் இதை குறிப்பிட்டார். அந்த உரை வருமாறு: நான் சினிமா பேமிலியிலிருந்து வந்தாலும் யார்கிட்டேயும் அசிஸ்டெண்டா வேலை செய்தது கிடையாது. பெரிய நடிகனாகணும்றதுதான் ஆசை. ஏன்னா அதுதான் சிம்பிளனான வேலைன்னு முடிவு பண்ணியிருந்தேன்.
எஸ்.பி.பி.சரண் தான் "மாப்ள உன்னால படம் டைரக்ட் பண்ண முடியும்டா"ன்னு சொல்லி சென்னை 28 டைரக்ட் பண்ண வைத்தான். ஆக்சுவலா கதையை நாங்க ரெடிபண்ணிட்டு சமுத்திரக்கனியத்தான் டைரக்ட் பண்ண வைக்கலாமுன்னு முடிவு பண்ணியிருந்தோம். சரண்தான் உன்னால முடியும் பண்ணுன்னு கம்பல் பண்ணி டைரக்ட் பண்ண வச்சான். சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணின்னு 5 படம் முடிச்சிட்டேன். சில படத்தை நீங்க திட்டியிருக்கீங்க, சில படத்தை பாராட்டி இருக்கீங்க. கடவுள் புண்ணியத்துல எல்லாமே நல்ல ஓடுச்சு.
இப்போ பிரியாணி படத்தைகூட ரெண்டு விதமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. மக்களுக்கு பிடிச்சு போச்சு நல்லா போயிட்டிருக்கு. நான் யார்கிட்டேயும் அசிஸ்டெண்டா வேலை செய்ததில்லை. சினிமா நிறைய பார்ப்பேன். இந்த அனுபவத்துல படம் எடுக்குறேன். சினிமா படிச்சு சினிமா எடுக்கல. சினிமா பார்த்து சினிமா எடுக்குறேன். அதான் என்னோட சில படங்கள்ல வேறு படத்தோட பாதிப்பு இருக்கும். இப்போ நான் 5 படம் முடிச்சிருக்கேன். ஆனா என்னோட அசிஸ்டெண்ட்ஸ் 6 பேர் தனிதனியா படம் பண்ணிக்கிட்டிருக்காங்க. அதுவும் சந்தோஷமா இருக்கு.
அடுத்து சூர்யாவோட சேர்ந்து படம் பண்றேன். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்குது. இப்போ சூர்யா லிங்குசாமி படத்துல நடிச்சிக்கிட்டிருக்கார். அது முடிந்ததும் எங்கிட்டதான் மாட்டுவார். அப்புறம் மீடியால்லாம் என்ன தனிப்பட்ட முறையிலேயும் கலாய்க்றாங்க. அதை ஜனங்க ரசிக்கிறாங்க. அதனால நான் அதையும் பெருசா எடுத்துக்கிறதில்ல. எப்படியோ மக்களை எண்டர்டெய்ன் பண்ணினா போதும் என்கிறார்.