இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பெரியார் படத்திற்கு பிறகு ஞானராஜசேகரன் டைரக்ட் செய்து வரும் படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம். ராமானுஜனாக அபிநய் நடிக்கிறார். அவரது மனைவியாக பாமாவும், தாயாக சுஹாசினியும், அவரது ஆங்கிலேய நண்பர்களாக கெவின் மெக்வினும், மைக்கேல் லாடரும் நடிக்கிறார்கள். ரமேஷ் விநாயம் இசை மீட்டுகிறார். சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். ராமானுஜன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
கடந்த 22ந் தேதி கணிதமேதை ராமாஜனுத்தின் 126வது பிறந்த நாளாகும். அதை படபிடிப்பு குழுவினர் கொண்டாடினார்கள் பின்னர் டைரக்டர் ஞானராஜசேகரன் கூறியதாவது:
கணிதமேதை ராமானுஜன் சிறு வயதிலேயே கணிதமேதையாக இருந்தார். அவரது கணித திறன் அபாரமாக இருந்தது. கணிதத்தில் பெரிய பயிற்சி எதுவும் இல்லாமல் வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். நம்பர் தியரி, முடிவில்லாத தொடர், பின்னம் ஆகியவற்றை தனது கணித பகுப்பாய்வில் கண்டுபிடித்தார். ஐடெண்ட்டீஸ் மற்றும் அஇக்குவேஷனிலும் தானாகவே 3900 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி குறித்து வைத்திருந்தார். இப்போது அது எல்லாமே சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அங்கீகரிக்கப்படவில்லை. தனது கண்டுபிடிப்புகளை சிலுவையை போல சுமந்து திரிந்தார். சமூகம் அவரை பைத்தியக்காரன் என்று விமர்சித்தது. கல்வி நிலையங்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. அவரின் இந்த பாடுகளும், துன்பங்களும்தான் அவரை பற்றி படம் எடுக்கத் தூண்டியது. 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. என்றார்.
சினிமா விழாக்களுக்கு கோடி கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கும் அரசாங்கம். இந்த ராமானுஜன் பக்கமும் தன் கவனத்தை செலுத்தினால் இன்றைய இளம் தலைமுறையினரிடம் ராமானுஜனை கொண்டு செல்லலாம் என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.