'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. ரஜினியின் நெருங்கிய நண்பர். மோகன்பாபு திருப்பதியை சுற்றி நிறைய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது கல்வி சேவையை பாராட்டி மத்திய அரச அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
மரியாதைக்குரிய இந்த விருதை தனது அரசியல் செல்வாக்கிற்கும், கல்வி நிறுவனங்களை வளர்ப்பதற்கும் மோகன்பாபு தவறாக பயன்படுத்துகிறார் எனவே அந்த விருதை அவரிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களுடன், இந்திரசேனா ரெட்டி என்பவர் ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம். மோகன்பாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மோகன்பாவு முடிவு செய்துள்ளார்.