'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருநள்ளாறு கோவிலில் நவகிரக சாந்தி ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டிசம்பர் 21 நடந்த இந்த நிகழ்ச்சியல் நடிகர் விஜய் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து காரில் மனைவியுடன் சென்ற விஜய் ஹோமத்தில் பக்தி பெருக்குடன் கலந்து கொண்டார். பின்னர் சிவனையும், சனிபகவானையும் வழிபட்டார். சனிபகவானுக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டார்.
விஜய் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய்யை திடீரென கோவிலில் பார்த்த மக்கள் ஆச்சர்யத்துடன் அவரை பார்த்தனர். சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு காரில் சென்னை திரும்பினார். வருகிற ஜனவரி 10ந் தேதி அவர் நடித்துள்ள ஜில்லா படம் வெளிவர இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் படம் ரிலீசாகி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது குடும்ப ஜோதிடர் வேண்டுகோளின்படி விஜய் திருநள்ளாறு வந்து சென்றதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.