மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
1980களில் தமிழ், இந்தி சினிமாக்களின் கனவு கன்னியாக விளங்கியர் ஸ்ரீதேவி. இந்திபட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். மும்பை அந்தேரி பகுதியல் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். மாடி போர்ஷனில் ஸ்ரீதேவி அறையும், இரண்டாவது மகள் குஷி அறையும் உள்ளது. தரை தளத்தில் முதல் மகள் ஜான்வி அறை உள்ளது.
நேற்று முன்தினம் காலை ஜான்வி தன் அறையில் தூங்கி எழுந்தபோது கருகிய வாசனை வருவது கண்டு திடுக்கிட்டார். அவர் அறையில் இருந்த ஏசியில் இருந்து புகை வந்தது. அதை தொடர்ந்து தீபிடித்தது, ஏசியின் அருகில் இருந்த நாற்காலி மேஜைக்கு தீ பரவியதும் ஜான்வி அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார். அவரது சத்தம் கேட்டு முதல் மாடியில் இருந்த ஸ்ரீதேவியும், குஷியும் ஓடிவந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் வந்து தீயை அணைத்தனர். ஜான்வி அறையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் கருகியது. ஏசி எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீ விபத்தை முதலிலேயே உணர்ந்து ஜானவி வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.