சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் நிமிர்ந்து நில். இந்த படம், தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கை ஜெயம்ரவிக்கு நிறையவே இருக்கிறது. சமுத்திரகனி கடந்த காலங்களில் கொடுத்து வரும் சில ஹிட்கள்தான் இதற்கு காரணமாம். அதனால்தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.
மேலும், இப்படத்தின் தமிழ் பதிப்பில் ஜெயம்ரவி நாயகன், என்றால், தெலுங்கு பதிப்பில் நான்ஈ படத்தில் நடித்த நானி நடித்திருக்கிறார். அவரும் ஜெயம்ரவிக்கு இணையாக போட்டா போட்டியில் இப்படத்தில் நடித்திருக்கிறாராம். ஆனால் இரண்டு மொழிகளிலுமே இவர்களுக்கு ஜோடி போட்டிருப்பவர் மைனா அமலாபால்.
இந்நிலையில், விரைவில் படம் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில், டைரக்டர் சமுத்திரகனியைப்பற்றியும், ஜெயம்ரவியைப்பற்றியும் மானாவாரியாக பெருமையடித்துக்கொண்டு திரிகிறார் அமலாபால். குறிப்பாக, இப்படியொரு ஹீரோவை இதுவரை நான் சந்தித்ததில்லை என்று ஜெயம்ரவியே வெட்கப்படும் அளவுக்கு அவரைப்பற்றிய பெருமைகளை பில்டப் கொடுக்கிறார் அமலாபால்
ஆனால், ஜெயம்ரவி மட்டும் என்ன அமலாபாலுக்கு இளைத்தவரா? நிமிர்ந்துநில் படத்தின் தெலுங்கு படத்தில் நடித்துள்ள நானியை ஓவராக புகழ்ந்து தள்ளிவிட்டார். நானியை ரஜினி சார் மாதிரி என்கிறார். ரஜினி சார் எப்படி மற்றவர்களை உயர்த்தி தன்னை தாழ்த்திக்கொள்வாரோ அதேபோல் நானியும் மற்றவர்களை உயர்த்தி தன்னை தாழ்த்திக்கொள்ளக்கூடியவர். அவருடைய குணாதிசயத்தை பார்க்கையில் எனக்கு ரஜினி சார்தான் ஞாபகத்துக்கு வருகிறார் என்கிறார்.