தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம், அஞ்சாதேயில் கத்தாழ கண்ணால குத்தாதே, யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா போன்ற குத்துப்பாட்டுக்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதோடு அந்த படங்களின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்தன. கடைசியாக அவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பாடல்களே இடம்பெறவில்லை. ஆனால் அந்த படமோ வெற்றி பெறவில்லை. இதையடுத்து, மிஷ்கினிடத்தில் உங்கள் படங்களுக்கு குத்துப்பாடல்கள்தானே இதுவரை பலமாக இருந்துள்ளன. ஆனால் நீங்கள் எதற்காக அதை வெறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினால்,
அதற்கு, குத்துப்பாடல்கள்தான் சினிமாவில் எனக்கு பிடிக்காத விசயமே. இதற்கு முந்தைய எனது படங்களில் அந்த மாதிரி பாடல்கள் இடம்பெற்றது என்றால் அதற்கு தயாரிப்பாளர்களின் வற்புறுத்தல்தான் காரணம். அதனால்தான் எனக்கு பிடிக்காத விசயங்கள் என் படங்களில் இடம்பெற்று வந்தன என்கிறார்.
மேலும், குத்துப்பாடல்களுக்காக படம் ஓடுகிறது என்பதை என்னால் ஏற்க முடியாது. அந்த படங்களின் கதையும், காட்சியமைப்புகளும்தான் வெற்றிக்கு மூலகாரணம். குத்துப்பாடல்களே வெற்றியை தீர்மானிக்கின்றன என்றால், இன்றைக்கு குத்துப்பாட்டு இல்லாத படமே இல்லை. ஆனால் அப்படி இடம்பெறுகிற எல்லா படங்களும் வெற்றி பெறுவதில்லையே என்றும் எதிர்கேள்வி கேட்கும் மிஷ்கின், எதிர்காலத்தில் நான் இயக்கும் எந்தவொரு படத்திலும் இதுபோன்ற குத்துப்பாட்டுகள் இடம்பெறாது. காரணம், குத்துப்பாட்டுகளை நம்பி நானில்லை என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் அவர்.