மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
உலகளாவிய கவர்ச்சி பிரியர்களை ரசிகர்களாக கொண்டவர் கவர்ச்சி புயல் சன்னி லியோன். பிட்டு துணி போன்ற காஸ்டியூம்களை அணிந்து கொண்டு சில நடிகைகள் சூடு காட்டிக்கொண்டிருக்கும் கலை உலகில், இவரோ, பிறந்தமேனியாய் நடித்து பரபரப்பு தீயை பற்ற வைத்துக்கொண்டிருப்பவர். இதனால் சன்னியின் பெயரைக்கேட்டால் ரசிகர்களின் மனங்குளத்தில் பகீர் தீ பக்கென்று பற்றிக்கொள்ளும்.
அதனால் அப்படிப்பட்ட சன்னிலியோன் கோலிவுட்டுக்கு வந்து விட்டார் என்றதும் நம்மஊர் அரும்பு மீசை ராசாக்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அப்படின்னா இனிமே தொடர்ந்து சன்னியின் அட்டகாசத்தை கோடம்பாக்க படங்களிலே கண்டுகளிக்கலாம் என்று பேரார்வத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே ஏராளமான டியூன் போட்டு அதில் ஒன்றை பதிவு செய்து கொண்டு இப்போது தாய்லாந்தில் முகாமிட்டுள்ளனர். அங்கே ஜெய்யுடன் வரிந்து கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார் சன்னி.
இந்நிலையில், பாலிவுட் ரேஞ்சுக்காவது தமிழ் படத்தில் சன்னியின் கவர்ச்சி சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக, அவர் அப்பாடலில் புடவை கட்டி நடிப்பதாக அப்படக்குழு தெரிவிக்கிறது. அதேசமயம், புடவையில் எந்த அளவுக்கு சன்னியை பிழிந்து எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ஜூஸ் போட்டு வருகிறார்களாம். அதனால் நம்ம ஊர் கவர்ச்சி பிரியர்களுக்கு இதுவே ஓவர்டோஸாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
ஆனால், சன்னியைப்பொறுத்தவரை, இதெல்லாம் சாதாரண சமாச்சாரம். புடவையில் தன்னை கண்ணாடியில் பார்த்து இந்த மாதிரி உடம்பை கவர் பண்ற டிரஸ்செல்லாம் நான் இதற்கு முன்னாடி யூஸ் பண்ணினதே இல்லை. புடவையில் என்னோட கிளாமர் ரொம்ப புதுசா இருக்கு. என்னோட கேரியர்ல இது ரொம்ப புதிய அனுபவம் என்று முன்னும் பின்னும் தன்னை சுற்றி சுற்றி பார்த்து பூரித்துப்போகிறாராம்.