'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சி.பி.ஐ., அதிகாரி, போலீஸ் அதிகாரி போன்ற வேடங்களில் நடித்து, நம்முடைய மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு, போரடித்து விட்டது போலிருக்கிறது. இதனால், இப்போது, இந்த படத்தின் மூலம், பத்திரிகையாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஆக் ஷனும், த்ரில்லரும் நிறைந்த இந்த படத்தில், அநியாயத்தையும், அடக்குமுறையையும் கண்டு கலங்காத, தைரியமான, பத்திரிகையாளராக, வெளுத்து வாங்கியுள்ளாராம் மம்மூட்டி. தீபன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, மம்மூட்டியின் ரசிகர்கள், ரொம்பவே எதிர்பார்க்கின்றனர். முதல் முறையாக, இந்த படத்தில், அவர், வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளது தான், இதற்கு காரணம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை, நியூஸ் மேக்கர் நிறைவேற்றுவாரா என, பொறுத்திருந்து பார்ப்போம்.