நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தயாரிப்பாளர்களுக்கு நடிகர் விஜய், ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியதற்கு அவருடன் பணியாற்றிய இயக்குனர்கள் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய இயக்குனர் வெங்கடேஷ் ( நிலாவே வா), எழில் (துள்ளாத மனமும் துள்ளும்), ஜெகன் (புதிய கீதை), செல்வ பாரதி (நினைத்தேன் வந்தாய், ப்ரிமானவளே), வின்சென்ட் செல்வா (ப்யமுடன்), ரவி (ஷாஜகான்) ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக நடிகர் விஜய் நன்கொடை அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; அவருக்கு மிகவும் நன்றி; தயாரிப்பாளர்களுக்கு உதவி செல்வதில் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜய் உள்ளார்; பாண்டியன் படத்தில் தம்முடன் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் குழுவினருக்காக ரஜினி அருணாச்சலம் படத்தில் நடித்துக் கொடுத்தார்; இது போன்று விஜய்யும் உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.