Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புகார் வாபஸ் விவகாரம்: ராதா பக்கம் திரும்புகிறது போலீஸ் நடவடிக்கை

20 டிச, 2013 - 14:08 IST
எழுத்தின் அளவு:

நடிகை ராதா தன்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த பைசூல் என்பவர் தாலி கட்டாத மனைவியாக வைத்திருந்தாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி என்னிடம் இருந்து 50 லட்சத்தை பறித்து கொண்டார் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்மல்க புகார் கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி காவல் நிலையத்துக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்த வடபழனி போலீசார் ராதாவிடம் புகார் பெற்று பைசூல் மீது வழக்கு பதிந்தது. கோர்ட்டில் பைசூல் முன் ஜாமீன் மனுவை மூன்று முறை தாக்கல் செய்தார். மூன்றுமுறையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் பைசூலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. பைசூல் போலீஸில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தார்.

போலீசார் பைசூலுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். அவரை கைது செய்ய தயங்குகிறார்கள், என்று ராதா கமிஷனரிடம் மீண்டும் புகார் அளித்தார். இந்த நிலையில் வடபழனி காவல் நிலையம் சென்று புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் ராதா. போலீசார் வழக்கை கோர்ட்டுக்கு சென்று வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டனர்.

இந்த நிலையில் ராதாவின் புகார் வாபஸ் தொடர்பாக போலீஸ் தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளது. பைசூலிடம் 50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ராதா புகாரை வாபஸ் பெற்றாரா? அல்லது பைசூலின் மிரட்டலுக்கு பயந்து வாபஸ் பெற்றாரா? அல்லது சினிமா வாய்ப்பு இல்லாத ராதா பரபரப்பு பப்ளிசிட்டிக்காக போலீசை பயன்படுத்திக் கொண்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

"பைசூலிடம் பணம் பெற்றது ஊர்ஜிதமானால் போலீஸ் மற்றும் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தற்காக அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும். பணத்தை பறிமுதல் செய்து அதனை கோர்ட் மூலமே அவர் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். பணம் கொடுத்திருந்தாலும் பைசூல் மீது நடவடிக்கை இருக்கும். பைசூலிடம் பணம் பறிக்கவே ராதா பொய் புகார் கூறியதாக ராதா மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்" என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

அப்பு - மதுரை ,இந்தியா
21 டிச, 2013 - 15:20 Report Abuse
அப்பு தன் வினை தன்னை சுடும்....தப்பு செய்தவர்கள் தண்டனை அடையட்டும்...
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
20 டிச, 2013 - 15:58 Report Abuse
Vaal Payyan அய்யா போலிசு .. 20 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்லுது ... சாதா வழக்க விட்டுட்டு இந்த ராதா வழக்குக்கு இவ்ளோ விசாரணையா ....
Rate this:
Saravana Tedosh - Coimbatore,இந்தியா
20 டிச, 2013 - 15:37 Report Abuse
Saravana Tedosh புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in