பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
லிங்குசாமி இயக்கும் படத்துக்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் சூர்யா. ஏற்கனவே விஜய்யின் தலைவா, அஜீத்தின் ஆரம்பம் படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடந்ததையடுத்து ஒரு செண்டிமென்டுக்காக இவர்களும் மும்பையில் முகாமிட்டிருக்கிறார்களாம். அப்படி மும்பையில் படப்பிடிப்பு நடத்தி விட்டு ஒரு மும்பை நடிகையையாவது படத்தில் நடிக்க வைக்காமல் இருந்தால் நல்லாவா இருக்கும் என்று இப்போது சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாட ஒரு பாலிவுட் நடிகையை புக் பண்ணியிருக்கிறார்களாம்.
ஏற்கனவே இதே பாடலுக்கு நடனமாட நடிகையின் டைரி சனாகானைத்தான் கேட்டனர். ஆனால்,. சல்மான்கானுடன் டூயட் பாடும் என்னை சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆட அழைப்பதா? என்று டென்சனை காட்டி விட்டார். அதனால், சனாகானை விட ஒரு முன்னணி இந்தி நடிகையை இந்த படத்தில் ஆடவைத்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இப்போது அங்குள்ள ஒரு பிரபல நடிகையிடம் பேசி ஓ.கே பண்ணிவிட்டார்களாம்.
ஆனால், அந்த நடிகை யார்? என்ற விவரங்களை ரொம்ப சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் ஷாரூக்கான், சல்மான்கான் என அங்குள்ள முன்னணி கான் நடிகர்களுடன் கால் தூக்கி ஆட்டம் போட்டவர்தானாம். இப்படி சூசகமாக சொல்லும் அப்படக்குழுவினர், இப்பாடல் சிங்கம்-2 படத்தில் அஞ்சலியுடன் சூர்யா ஆடிய ஆட்டத்தை விடவும் அதிரடியாக இருக்கும். இந்த பாடலுக்காக மும்பையில் பல கோடி செலவில் பிரமாண்டமான செட் போடும் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.