மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் ரசிகர்களை கலக்கி எடுத்து வரும் கவர்ச்சி புயல் சன்னி லியோன், வடகறி படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் கலங்கடிக்க வருகிறார். இந்த படத்தில் தன்னுடன் ஒரு அயிட்டம் பாடலில் சன்னி ஆடப்போகிறார் என்றதுமே பட நாயகன் ஜெய்க்கு ஆட்டம் கண்டு விட்டதாம். ஏற்கனவே தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளுடன் ஆட்டம் போட்ட அனுபவம் பெற்றவர்தான் என்றாலும், சன்னி சகட்டு மேனிக்கு ஆடுபவராச்சே. அதனால் அவருக்கு முன்பு நாம் தாக்குப்பிடிப்போமா என்பதில் ஏற்பட்டதுதான் அந்த அச்சம் கலந்த ஆட்டமாம்.
அதையடுத்து, அவசரகதியில் சன்னி கலக்கல், குலுக்கல் ஆட்டம் போட்ட சில படங்களைப்பார்த்த ஜெய், சில நாட்களாகவே அவருக்கு ஈடுகொடுப்பது எப்படி என்பதை ஒரு நடனமாஸ்டரை வைத்து பயிற்சி எடுத்து ஓரளவு தன்னை தயார் படுத்தி விட்டாராம். அதனால், இப்போது தடதடவென்று ஆடிய அவரது கால்கள் ஆட்டம் போடுவதை நிறுத்தி விட்டு, சன்னியுடன் ஆடும் நாளுக்காக தயார் நிலையில் உள்ளதாம்.
மேலும், இந்த படத்தில் சன்னி எந்த மாதிரியான காஸ்டியூமில் ஆடப்போகிறார் என்பதை அறிய டைரக்டரிடம் நூல் விட்டாராம் ஜெய். அப்போது, பயப்படும்படியாக எதுவும் இல்லை. புடவை கட்டித்தான் ஆடப்போகிறார் என்றாராம். அதைக்கேட்டு அவருக்கு இன்னும் ஷாக்காம். அயிட்டம் பாடலுககு எப்படி புடவையில் ஆடுவார் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினாராம்.
அதற்கு, சன்னியின் ஓவர் தரிசனத்தைக் கண்டால் நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஜன்னி வந்து விடும். அதனால்தான் ஒரு பாதுகாப்புக்காக புடவையில்அம்மணியை கவர்ச்சி குத்து விளக்காக களமிறங்குகிறோம் என்று தான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்பற்றி சொன்னாராம். அதன்பிறகே அப்பாடா, நான் தப்பிச்சேன். இல்லேன்னா சன்னியின் கவர்ச்சிக்கு முன்னால் எனக்கு ஆட்டமே வராது. ஓட்டம் பிடித்து விடுவேன். நல்லநேரம், டைரக்டர் காஸ்டியூம் விசயத்தில் நமக்கு கைகொடுத்து விட்டார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாராம் ஜெய்.