மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கண்களால் கைது செய் படத்தின் மூலம், சினிமாவுக்கு வந்த ப்ரியா மணிக்கு, பருத்தி வீரன் படம் தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. ஆனாலும், அதன்பின், அவருக்கு மணிரத்னம் இயக்கிய, ராவணன் படத்தில் விக்ரமின் தங்கை வேடமே கிடைத்தது. அதையடுத்து, யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால், தெலுங்கு, கன்னடம் என்று, பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்தப்ரியா மணிக்கு, இப்போது வரை, தமிழில் பட வாய்ப்பில்லை. இதனால், மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.
அவர் கூறுகையில், என் திறமைக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தது, தமிழ் சினிமா தான். ஆனால், அதன் பின் தமிழில் எனக்கு மார்க்கெட் இல்லை. விருது பெற்ற எனக்கு, தமிழில் மரியாதை இல்லாததால், என் மனம் மீண்டும் இங்கு வர மறுக்கிறது என்று வருத்தப்படும் ப்ரியா மணி, என் திறமைக்கு சவால் விடக்கூடிய கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே மறுபடியும் தமிழுக்கு வருவேன் என்கிறார்.