தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி படங்களுக்கு பின் சூடு பிடித்த, அவரது மார்க்கெட், தற்போது இறங்கி விட்டதாக பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி காஜலைக் கேட்டால், நான் எப்போதும் போல், இப்போதும் பிசியாகவே நடித்து வருகிறேன். தமிழில், ஜில்லாவில் மட்டுமே நடித்த போதும், இந்தி, தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடிக்கிறேன். இதையடுத்து, நடிப்பதற்காக சில கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்லும் காஜல் அகர்வால், சினிமாவுக்கு வந்ததில் இருந்தே, ஒரு பாலிசியை கடைபிடிக்கிறாராம். அதாவது, மனசுக்கு பிடித்த கதைகளை மட்டுமே ஏற்று நடிப்பது. ஆனால், அப்படங்கள் வெற்றி, தோல்வி என, எதை சந்தித்தாலும் அதை மனதில் கொள்வதில்லையாம். படங்களின் ரிசல்டைப் பற்றி யார் பேசினாலும் அதற்கு நான் பொறுப்பல்ல என, நழுவி விடுகிறார்.