ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தமிழ் மொழி காக்கும் மலேசியா', இது இசையமைப்பாளர் தாஜ்நூர், மலேசிய தமிழர்கள், மலேசியாவின் பெருமையை தமிழில் சொல்லும்படி உருவாக்கிய இசை ஆல்பத்தின் பெயர் ஆகும். இந்த இசை ஆல்பம் மலேசியாவில் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன், இசை அமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹானா, பின்னணி பாடகர்கள் வேல்முருகன், யாசின், நான்ஸி, சத்யன் உள்பட பலரும் கலந்துகொள்ள வெகு விமரிசையாக சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது! இந்நிகழ்ச்சியை ஏ.ஆர்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து அஷ்ரப் மற்றும் ரஷிதா இருவரும் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
'தமிழ் மொழி காக்கும் மலேசியா' இசை ஆல்பம் குறித்து தாஜ்நூர் இவ்வாறு கூறுகிறார், எவ்வாறு? ஒவ்வொரு முறை மலேசியா போகும் போதும் அந்த அழகான ஊரை பற்றி, நம் அழகு தமிழில் இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அதற்கு இப்பொழுது தான் நேரம் வந்தது போலும்... மலேசிய வாழ் பெண் கவிஞர் ரஷிதா பொருத்தமான வரிகளுடன் என்னை நாடி வந்தார். உடனடியாக ஒப்புக்கொண்டேன். ஆல்பம் ரெடி! பாரதிராஜா கையால் அதை மலேசியாவில் வெளியிட்டு மகிழ்ந்தது மறக்க முடியாதது எனும் தாஜ்நூர், இனி மலேசிய கலைஞர்களையும் தன் இசையில் பயன்படுத்திக் கொள்ளும் முடிவிலும் இருக்கிறாராம்! வாழ்த்துவோம்!