மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய திரைப்பட வர்த்தசபை சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் கோடிக் கணக்கில் அதற்கு சொத்து இருக்கிறது. இந்த சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் கல்யாண் சேம்பர் தலைவராக இருக்கிறார். இவரது தலைமையிலான நிர்வாகிகளின் பதவிகாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தவில்லை.
சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். சங்கத்தின் இரண்டாவது கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டியது இருக்கிறது என்ற காரணங்களை சொல்லி தேர்தலை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்கள். இந்த நிலையில் எஸ்.எஸ். மூவீஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சேம்பர் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று கோரி உள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜனவரி 3ந் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு சேம்பருக்கு உத்தரவிட்டுள்ளது.