தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாரன், குர்த் பிரிவின் விடுதலைப் போரின் ஹீரோ. எர்பிள் என்ற இடத்தில் ஷெரீப் ஆக இருக்கிறார். காவல் துறையில் பணிபுரிந்தது போதும், வீட்டிற்கு திரும்பலாம் என்று அவர் மேலதிகாரியிடம் சொல்கிறார். உங்களைப்போன்ற நேர்மையான தைரியமான அதிகாரியை நாங்கள் இழக்க விரும்பவில்லை என்று சொல்லும் மேலதிகாரி, பாரனின் விருப்பத்திற்கு இணங்கி, ஈரான், துருக்கி, ஈராக் நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அதிகாரியாக நியமிக்கிறார். மலைப்பகுதியில் காரில் சென்று பள்ளத்தாக்கு பகுதியில் குதிரையின் மீது சென்று சிறு ஆற்றை கடந்து தான் அங்கு செல்ல வேண்டும்.
போதைப் பொருள், மதுபானங்கள் போன்றவற்றில் கள்ளக்கடத்தல் செய்து ஏராளமாக பணமும், செல்வாக்கும் உள்ள அகா அஸ்ஸி, பாரனை விருந்துக்கு அழைக்கிறார். முதல் சந்திப்பிலேயே சட்டத்திற்கு புறம்பான எந்த நடவடிக்கையையும் நான் பொறுத்த கொள்ள மாட்டேன், உங்களிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை என்று தெளிவாக கூறிவிடுகிறார் பாரன்.
அதே கிராமத்திற்கு டீச்சராக கோவென் வருகிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த இளம் பெண்ணாக இருந்தாலும் கோவென்னிற்கு ஏழை குழந்தைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம். வெகு தூரத்தில் இருக்கும் இடம் என்பதால் அங்கு பணி செய்ய யாரும் விரும்பவில்லை, அதனாலும் பணியை ஏற்கிறார். பாதுகாப்பு கருதி போலீஸ் நிலையம் உள்ள சிறு கட்டடத்திலேயே கோவென் தங்குகிறார்.
அகா அஸ்ஸியின் ஆட்கள், கள்ளத் கடத்தலில் ஈடுபடுவதை கையும் களவுமாக பாரன் பிடித்து கைது செய்தாலும், அகா அஸ்ஸிக்கு துணை போகும் மாஜிஸ்ட்ரேட் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு சொல்லி அகா அஸ்ஸியின் ஆட்களை விடுவிக்கிறார். அகா அஸ்ஸி, பாரனை எச்சரிக்கிறார். பாரனும், கோவெனும் அருஅருகே தங்குவதை வைத்து அவர்களுக்குள் தகாத உறவு இருக்கிறது என்று கிராமத்தில் வதந்தியை கிளப்புகிறார். அவர் செல்வாக்கை பயன்படுத்தி குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வராமல் செய்து விடுகிறார். கோவென் இதனால் வருத்தப்படுகிறார். அவர்களுக்கு பல இன்னல்கள் வருகிறது. பாரனை கொல்ல முயற்சி எல்லாம் அகா அஸ்ஸி செய்கிறார். பாரன், அகா அஸ்ஸியின் வீட்டுக்கு தனியாக சென்று அவரையும் அவரது ஆட்களையும் கொன்று கள்ளக்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். பாரனும், கோவெனும் இணைகிறார்கள்.
தமிழ் நடிகர் ஆதி போன்று சற்று தைரியம், பாரனாக நடிக்கும் நடிகர். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நல்ல மிடுக்கோடு நடித்துள்ளார்.
கோவெனாக நடித்துள்ள நடிகை நல்ல அழகு. இதுவரை நாம் பார்த்திராத வட்ட வடிவான தோலினால் செய்யப்பட்ட இசைக்கருவியை வைத்து கோவென் இனிமையான இசையை படைக்கும் இடத்திலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கிராம மக்களிடம் கேட்கும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தன் பாத்திரத்தை மெருகு சேர்த்திருக்கிறார். கோவென் இந்தியாவுக்கு வந்தால் இந்தி, தமிழ் திரையுலகம் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்கும்.
மலைகள், பள்ளத்தாக்கு என்று படம் முழுக்க அழகான இடம். வண்டி போகாத அந்த இடத்தில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தியிருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலை அளித்து இருக்கும்.
இப்படத்தை இயக்கியுள்ள ஹினர் சலீம் தனது ''வோட்கா லெமன்'' என்ற படத்திற்காக வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -