ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் காண்பித்த முக்கியமான இயக்குநர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். கோகிலா, மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர் கடைசியாக தனுஷை வைத்து 2005ம் ஆண்டில் அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைமுறைகள் எனும் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயான பாசத்தை மையப்படுத்தை இப்படத்தை இயக்கியுள்ளார் பாலுமகேந்திரா. இளையராஜா இசையமைக்க, இயக்குநர் சசிகுமார் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 20ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதில் பத்திரிகையாளர்களுடன் பாலுமகேந்திராவும் படத்தை பார்த்தார். படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த பாலுமகேந்திரா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில் இந்த தலைமுறைகள் படத்தின் கதையை நான் எனது 8 வயதிலேயே தயார் செய்துவிட்டேன். நான் சிறு வயதில் இருக்கும்போது எனக்கு பல விஷயங்களை என் அத்தை, உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் தான் சொல்லிக் கொடுத்தனர். அப்போது எனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் இப்போது படமாக்கியுள்ளேன். இந்தப்படத்தில் தாத்தா பேரன் உறவு, தந்தை மகன் பாசம், தமிழ் மொழி நம்மிடையே மறந்து போவது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லியிருக்கிறேன். இதையெல்லாம் இன்று திரையில் பார்க்கும்போது எனது பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது, அதனால் அழுதுவிட்டேன் என்று கூறினார்.