'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அஜீத்தின் வீடு திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் (டிசம்பர் 15) நள்ளிரவில் இரண்டு போதை வாலிபர்கள் அஜீத் வீட்டிற்கு சென்று வாட்ச்மேனிடம் தல அஜீத்தை அவசரமாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர் வெளியூர் போயிருக்கிறார் நாளைக்கு பகலில் வாருங்கள் என்று வாட்ச்மேன் கூறியிருக்கிறார். அப்படி இருந்தும் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அஜீத் காரில் வீடு திரும்பியிருக்கிறார். காருக்காக வாட்ச்மேன் கதவை திறந்ததும காருக்கு பின்னாலேயே அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டனர். மது அருந்துகிறவர்களை கண்டாலே பிடிக்காத அஜீத் அவர்களை திரும்பிக்கூட பார்க்காமல் வீட்டுக்குள் சென்று விட்டார்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு போனார்கள். அவர்கள் இருவரும் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், வெற்றி என்பது தெரியவந்தது. விடிய விடிய போதை தெளியும் வரை ஸ்டேஷனிலேயே இருந்த அவர்கள் மறுநாள் நாங்கள் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் அவரைப் பார்கத்தான் போனோம் என்று கதறி அழுதிருக்கிறார்கள்.
போலீசார் அஜீத்துடன் தொடர்பு கொண்டு புகார் எதுவும் கொடுக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் "அப்படி எதுவும் வேண்டாம். புத்திமதி சொல்லி அனுப்பி வையுங்கள் போதும்" என்று கூறிவிட்டார். அதைத் தொடர்ந்த அந்த வாலிபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.