ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆரம்பம் வெற்றி பெற்றதற்காகவும், வீரம் படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவடைந்ததையொட்டியும், தனக்கு நடக்க இருக்கும் கால் ஆபரேஷன் சக்ஸசாக அமைய வேண்டியும் திருப்பதிக்கு மொட்டை போட்டார் அஜீத். வீரம் படத்தின் இயக்குனர் சிவாவுடன் திருப்பதி சென்ற அஜீத், அங்கு திருப்பதி ஏழுமலையானை வேண்டி மொட்டை போட்டுக் கொண்டார். அவருடன் இயக்குனர் சிவாவும் மொட்டை போட்டுக்கொண்டார். பின்னர் இருவரும் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
பின்னர் அஜீத் திருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் திருப்பதி வந்து பெருமாளை வணங்குவது எனது வழக்கம். முடிகாணிக்கை செலுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அடுத்தடுத்து படம் இருப்பதால் அது தள்ளிக்கொண்டே வந்தது. இப்போது அடுத்து நடிக்கும் கவுதம்மேனன் படம் பிப்ரவரியில் தொடங்குவதால். இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு முடிகாணிக்கை அளித்திருக்கிறேன்" என்றார்.