தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேர்மையாக செயல்படும் நடுத்தர வயது மாஜிஸ்ட்ரேட் ஜிகார்ராவின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்த கதை. நேர்மையற்றதாக காணப்படும் பெரு நாட்டில் நேர்மையானவருக்கு சங்கடங்கள் ஏற்படுவது இயற்கை தானே! பிஸியான ரோட்டில் செல்லும்போது அவருடைய காரின் கண்ணாடி உடைக்கப்படுகிறது. அவருடைய தீர்ப்பில் உள்ள நேர்மையை கவனிக்க விரும்பாத அதிகார்களால் ஜிகார்ராவிற்கு பதவி குறைப்பு அளிக்கப்பட்டு அவர் அவமானத்திற்கு ஆளாகிறார். மீண்டும் ஒரு சமயம் ரோட்டில் செல்லும்போது இரவில் யாரோ மர்ம மனிதர் இவரை சுட்டுவிடுகிறார். உடனே சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரால் பேச முடியாத சூழல் ஏற்படுகிறது.
காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து யோசித்து தன்னை சுட்டவர் யார், அதன் பின்னணி என்ன? என்று கண்டுபிடிக்க ஜிகார்ரா துடிக்கிறார். யாருக்கெல்லாம் அவர் கடுமையான தண்டனை வழங்கியிருக்கிறார் என்ற லிஸ்ட் எடுக்கப்படுகிறது. தன் மகன் குற்றம் செய்யவில்லை அவனை தண்டிக்கிறார்கள் என்ற ஒரு நடுத்தர வயது தாய் கதறி அழுததும், அதை பொருட்படுத்தாமல் இவர் தண்டனை விதித்ததும், அந்த தாய் இவரை கண்டபடி சபித்ததும் நினைவிற்கு வருகிறது. சந்தேகப்படுபவர்களை எல்லாம் போலீஸ் விசாரித்தாலும் பலன் ஏதும் கிட்டவில்லை. திட்டமிட்டு யாரும் சுடவில்லை, ஏதோ தற்செயலாக நடந்த விபத்து என்று போலீஸ் விசாரணையை முடித்து கொள்கிறது.
இந்த கஷ்டமான சூழ்நிலையில் அவரது தந்தை, அவரது மனப்போராட்டத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறுகிறார். தனிப்பட்ட முறையில் தன் முயற்சியை தொடர்கிறார் ஜிகார்ரா. சந்தேகப்படும் ஒருவரை நெருங்கும்போது அவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ஜிகார்ராவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. யாரோ தன்னை குறிவைத்து தான் தாக்கியிருக்கிறார்கள் என்று தெளிவாக நம்பும் ஜிகார்ரா தன் முயற்சியை தொடர்கிறார். ஓட்டலில் நடக்கும் விருந்து ஒன்றில் குடும்பத்துடன் இவர் செல்லும் போது, எல்லோரும் விருந்தை கொண்டாடுகிறார்கள். சிலர் இவர் பேச முடியாத நிலையை இருப்பதை உணர்ந்து உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது நிச்சயம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்கிறார்கள். ஜிகார்ராவுக்கு சங்கடமான சூழ்நிலை. கைகுலுக்குவதை தவிர பதில் ஏதும் கூற முடியவில்லை.
இதனிடையே உங்கள் மகன் ஜிகார்ராவின் மனைவியை வேறு ஒருவருடன் ஹோட்டல் அறையில் பார்த்தேன் என்று ஒரு நண்பர், ஜிகார்ராவின் தந்தையிடம் கூற, அதை மறைந்து இருந்து கேட்கும் ஜிகார்ரா வருந்துகிறார். தன் நிலைமையை எண்ணி நொந்து கொள்வதா...? மனைவி தன்னை ஏமாற்றுவதை யார் என்று கண்டுபிடிப்பதா...? என்று மீண்டும் தனது தேடல் படலத்தை தொடர்கிறார்.
ஜிகார்ராவாக நடித்திருக்கும் பெர்ணாண்டோ பஸிலியோவிற்கு லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். டீகோ வேகா மற்றும் டேனியல் வேகா இரண்டு பேரும் சேர்ந்து இந்தப்படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு நான்கையும் செய்திருக்கிறார்கள். நல்ல பாத்திரபடைப்பு.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -