விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் டைரக்ட் செய்யும் படத்திற்கு புறம்போக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எஸ்.பி.ஜனநாதன் தனது பைனரி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து கொடுக்கிறார். ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். ஹீரோயின்கள் செலக்ஷன் நடந்து வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு குளுமனாலியில் நடக்கிறது. ஹீரோயின் இல்லாத சண்டை காட்சிகளை முதல்கட்டாக படம்பிடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் புரமோஷனுக்னாக போட்டோ ஷூட் அண்மையில் நடந்தது. அப்போது இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் டைட்டில் குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: "புறம்போக்கு என்ற வாத்தை இப்போது தவறாக பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகவே மக்களுக்கு பயன்படுகிற எந்த அம்சத்திற்கும் புறம்போக்கு என்ற வார்த்தை பொருந்தும். ஈ படத்துக்கு அந்த பெயர் வைத்தபோது எல்லோரும் இதே மாதிரிதான் இது என்ன டைட்டில் என்றார்கள். ஆனால் படம் வந்த பிறகுதான் டைட்டிலுக்கும், படத்துக்குமான தொடர்பு தெரிந்தது. அதே மாதிரி இந்த டைட்டிலும் படம் வெளிவந்த பிறகு சரியாக புரிந்து கொள்ளப்படும்" என்றார்.