Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துருவ நட்சத்திரத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்? கவுதம் மேனன் விளக்கம்

05 டிச, 2013 - 10:33 IST
எழுத்தின் அளவு:

கவுதம் மேனன் டைரக்ட் செய்ய இருந்த துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து திடீரென சூர்யா விலகினார். இது தொடர்பாக அப்போது அவர் விடுத்த அறிக்கையில் "கவுதம் எனக்கு திருப்தி தரும் கதையை தரவில்லை. இனிமேலும் காத்திருக்க முடியாது. அதனால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நான் துருவநட்சத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இப்போது சூர்யா லிங்சாமியின் படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் சிம்புவை வைத்து அடுத்த படத்தை துவக்கி விட்டார். அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இரண்டு படத்திற்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா விலகிக் சென்றது பற்றி இதுவரை கருத்து சொல்லாத கவுதம் முதன் முறையாக அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: சூரியாவோடதான் அடுத்த படமுன்னு முடிவு பண்ணினேன். சூர்யாவும் "ஒகே கதை சொல்லுங்க சேர்ந்து பண்ணுவோம்"னு சொன்னார். நான் முதல்ல சொன்ன கதை அவருக்கு பிடிக்கல. "அடுத்த கதைக்கு போகலாமே"ன்னு சொன்னார். அதுவும் அவருக்கு பிடிக்கல. கடைசியா துருவ நட்சத்திரம் கதை சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்தார். அதனால் மற்ற வேலைகளை ஆரம்பிச்சேன். ஹீரோயின் த்ரிஷா. முக்கிய கேரக்டரில் பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் மேக் ஆர்தர், இசை ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாமே முடிவு பண்ணியாச்சு.

ஷூட்டிங் கிளம்புற அன்றைக்கு காலையில் "இது எனக்கு வேண்டாம்"னு அறிக்கை விட்டார். ரொம்ப அப்செட் ஆனேன். அவரை சந்திச்சு என்ன பிரச்னைனாலும் நாமே பேசியிருக்கலாமே எதுக்கு அறிக்கைலாம் என்று கேட்டு விட்டு வந்தேன். இரண்டு பேரும் ப்ராஜக்ட் பற்றி பேச ஆரம்பிச்சதிலிருந்தே அது என்ன? இது என்ன? என்று நிறைய கேள்விகள். அப்போது என் மனசுல தோன்றினதுதான் கடைசியா நடந்துச்சு.

ஏற்கெனவே விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 பற்றி சிம்புகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்த தொடர்புல அடுத்த படத்தை அவரோட ஆரம்பிச்சிட்டேன். ஆனால் இது விண்ணை தாண்டி வருவாயா -2 இல்லை. வேற காதல். வேற களம். ஏ.ஆர்.ரஹ்மான், டான் மேக் ஆர்தர்கிட்ட வாங்கின கால்ஷீட்டை இதுல பயன்படுத்திக்கிட்டேன்.

அடுத்து அஜீத் படம். பக்காவன ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பிப்வரி 15 லேருந்து ஷூட்டிங் கிளம்புறோம். என்ன நடந்திருந்தாலும் இப்பவும், எப்பவும் சூர்யா என் நண்பன்தான்.

இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

inidian - chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
06 டிச, 2013 - 02:09 Report Abuse
inidian sanda podathinga yettaiya..............
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
05 டிச, 2013 - 19:38 Report Abuse
தலைநகர தமிழன் சரி சரி ரெண்டுபேரும் சண்டைபோடாம அவரவர் திறமையை வெளிப்படுத்துங்க
Rate this:
Panneerselvam Asokan - Riyadh,சவுதி அரேபியா
05 டிச, 2013 - 17:03 Report Abuse
Panneerselvam Asokan சூர்யாவை பற்றி நல்ல செய்திகள் வராத அவர் நல்ல நடிகன் நல்ல மனிதன் இல்லை போலும்
Rate this:
LAX - Trichy,இந்தியா
05 டிச, 2013 - 12:53 Report Abuse
LAX அரசியல்வாதிகள் டயலாக் மாதிரிதான்.. - நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை..
Rate this:
SELVA RAJ - chennai,இந்தியா
05 டிச, 2013 - 12:51 Report Abuse
SELVA RAJ தல, தளபதி, ரஜினி, கமல் ஆகியோருக்கு எல்லாம் இதை விட பெரிய படங்கள் எல்லாம் ஆரம்பித்து கைவிடப்பட்டுள்ளன. அப்பொழுதெல்லாம் அவர்கள் அந்த டைரக்டருக்கு கதை செய்ய தெரியவில்லை, இயக்க தெரியவில்லை என அறிக்கை விட்டு அந்த டைரக்டரை அசிங்கபடுத்தியது இல்லை. இத்தனைக்கும் அவர் ஒன்னும் புதுமுக டைரக்டர் இல்லை. சினிமாவில் சூர்யாவிற்கு நிலையான இடம் இலாதபோது காக்க காக்க படம் மூலம் சூர்யாவிற்கு மிகபெரிய அங்கிகாரத்தை கொடுத்தவர். காக்க காக்க, வாரணம் ஆயிரம் எனும் இரண்டு மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார் சூர்யாவிற்கு. ஏறி வந்த ஏணியை எட்டி உதிப்பது தான் சூர்யாவிற்கு அழகோ அந்த அறிக்கையின் மூலம் சூர்யாவின் மனதில் எவ்வளவு வஞ்சம் உள்ளது என புரிகிறது.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in