டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் மகன் சாய் பிரதீப் பினிஷெட்டி, பைலட்டாக பறக்க வேண்டியவர் சினிமாவுக்கு வந்தார். ஒரே ஒரு தெலுங்கு படத்தில் நடித்து விட்டு ஆதி என்கிற பெயரோடு தமிழ் சினிமாவுக்கும் வந்தார். முதல் படத்திலேயே எச்ஐவி நோயாளியாக நடித்து நான் ஹீரோ இல்லை, நல்ல நடிகன் என்பதை நிரூபித்தார். ஈரம் அவருக்கு தனி அடையாளம் தந்தது. அடுத்து அவர் ஹீரோ அவதாரம் எடுத்த அய்யனார், ஆடுபுலி கைகொடுக்கவில்லை.
மீண்டும் நடிகனாகி கடுமையாக உழைத்து அரவானாக மாறினார். அதன் தோல்வி ஆதியை அதிர்ச்சி அடைய வைத்தது. தெலுங்கில் நடித்த குண்டலோ கோதாவரி தெலுங்கில் சுமாராக போச்சு. தமிழில் மறந்தேன் மன்னித்தேனாக வந்து சரியாக போகவில்லை.
எனவே இனி அவர் அடுத்த படத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் தன் சொந்த பேனரில் அண்ணன் சத்ய பிரபாஸ் பினிஷெட்டி டைரக்ஷனில் யாகாவராயினும் நாகாக்க படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படம் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் தெலுங்கு வெர்ஷனில் தெலுங்கு நடிகர்களும், தமிழ் வெர்ஷனில் தமிழ் நடிகர்களும் நடிக்கிறார்கள்.
ஆதியின் அடுத்த பாதையை தீர்மானிக்கப்போகிறது யாகாவராயினும் நாகாக்க.