வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சினிமாவுக்கு கிளாமர் அவசியம். அதனால் கிளாமர்தான் என் சாய்ஸ் என்று ஓப்பனாக போட்டு உடைக்கிறார் நடிகை ரீமா சென். ஆயிரத்தில் ஒருவன் படத்தை முடித்து விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் ரீமா அளித்துள்ள பேட்டியில், தமிழில் சில படங்கள் நடித்திருந்த போதிலும், எனக்கான அடையாளம் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குறையை ஆயிரத்தில் ஒருவன் தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்புதான், சில படங்களின் வாய்ப்புகளை இழக்க காரணம். ஆயிரத்தில் ஒருவன் என்னை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும். இந்தப் படத்துக்குப் பின்தான் அடுத்தப் படங்களில் நடிக்கலாம் என இருந்தேன். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்புகள் வரும் என்று கூறியுள்ளார். கிளாமர் குறித்த கேள்விக்கு, சினிமா என்றாலே கிளமார் என்பது முக்கியமான ஒன்றாகி விட்டது. யாதார்த்த சினிமாக்களில் கூட கிளாமரை எதிர்பார்க்கிறார்கள். கமர்ஷியல் சினிமாவில் நடிக்கும்போது கிளாமர் அவசியம். கிளாமராக நடிப்பதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை. கதைக்குதானே கிளாமராக நடிக்கிறேன். அதனால்தான் அது என் சாய்ஸ், என்று கூறுகிறார் ரீமா.