Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 லட்சத்தை பைசல் செய்யாமல் பைசூலை விட மாட்டேன்! நடிகை ராதா ஆவேசம்

02 டிச, 2013 - 17:09 IST
எழுத்தின் அளவு:

சுந்தரா டிராவல்ஸ், மானஸ்தன், அடாவடி உள்பட பல படங்களில் நடித்தவர் ராதா. இவர் தொழிலதிபர் பைசூல் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி செக்ஸ் வைத்துக்கொண்டதோடு, தன்னிடமிருந்து 50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். ஆனால், பைசூலை போலீசார் கைது செய்வதற்கு முன்பே அவர் முன்ஜாமீன் வாங்கி விட்டார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நடிகை ராதா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த மனு விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எனது நகைகளை விற்றும், ஆந்திராவிலுள்ள வீட்டை விற்றும் பைசூலுக்கு 50 லட்சம் பணம் கொடுத்தேன் என்று கூறி வரும் ராதா, இந்த விசயம் பெரிதாகி விட்டதால், இப்போது என்னை சமாதானம் செய்ய பைசூல் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், எனது 50 லட்சம் பணத்தை பைசூலிடமிருந்து பைசல் செய்யும் வரை நான் அவரை விடப்போவதில்லை என்று கூறியுள்ளார் ராதா.

மேலும், தன் மீது தவறு இல்லை என்று சொல்லும் பைசூல் எதற்காக தலைமறைவாக இருக்க வேண்டும். அவரே முன்வந்து தான் நிராபராதி என்பதை நிரூபிக்கலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
02 டிச, 2013 - 20:58 Report Abuse
GUNAVENDHAN தொழிலதிபர்களை வலைத்துப்போட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து முடிந்த அளவுக்கு பணத்தையும், நகைகளையும், சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டு , அவரிடம் மேலும் பிடுங்க ஒன்றும் இல்லாத நிலைமை வந்ததும் வீட்டைவிட்டு துரத்திவிட்டுவிட்ட நடிகைகளைப்பற்றி ஏற்கெனெவே கேள்விப்பட்டுள்ளோம், ஆனால் தன்னுடைய பணத்தை இழந்துவிட்டு இந்த நடிகை புலம்புவது அதிசயமாக இருக்கின்றது . அந்த கேடிப்பையனிடம் இருந்து பணத்தை வசூலிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லும் ராதா , அதில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும், இழந்த பணத்தை அக்கொடியவனிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் . இப்படிப்பட்ட பிராடுகளிடமேல்லாம் எப்படி இவர்கள் மாட்டுகின்றார்களோ ?.
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
03 டிச, 2013 - 12:06Report Abuse
தலைநகர தமிழன் பைசூலு பைசல் நல்லா இருக்கு உங்க காமெடி...
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:20 Report Abuse
தலைநகர தமிழன் 3 படங்களிலே வீடு,50 லட்சம் பணம் ஆகியவற்றை சம்பாதித்து விட்டாரா ?
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:19 Report Abuse
தலைநகர தமிழன் கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in