ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளா தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள நடிகைகளில் ஷோபனா குறிப்பிடத்தக்கவர். கேரளத்திலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் 1980 பக்த த்ரு மார்கண்டேயா என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் மணிரத்னத்தின் தளபதியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா, கே.பாக்யராஜின் இது நம்ம ஆளு உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், கதாநாயகி வாய்ப்புகள் குறைந்ததையடுத்து வெளிநாடுகளுக்கு சென்று நடன பள்ளிகள் நடத்தி வந்த அவர், தற்போது சென்னையில் நடன பள்ளி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனக்கு பொருத்தமான, பிடித்தமான கதாபாத்திரங்கள் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கும் ஷோபனா, ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருப்பதையடுத்து, தனது தாய்மொழியான மலையாளத்திலும் தற்போது திரைக்கு வந்துள்ள, திர என்றொரு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருக்கிறார்.
அதோடு, இந்த வேடத்தில் நீங்களே டப்பிங் பேசினால் உங்கள் நடிப்புக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் என்று அப்பட டைரக்டர் கேட்டுக்கொண்டதையடுத்து, தனக்குத்தானே டப்பிங் பேசியிருக்கிறாராம் ஷோபனா. அந்த வகையில், சினிமாவுக்கு வந்து 33 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் முதன்முறையாக தனது சொந்தக்குரலில் அவர் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.