பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள காமசூத்ரா 3டி படத்தின் டிரைலர், 44வது கோவா திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குனர் ரூபேஷ் பால் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தப்படம் படமாக்கப்பட்டபோது, சுமார் 22 மணிநேரம் படத்தின் ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, படக்குழு முன்பு நிர்வாணமாக நடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் உடையை அணிந்து பிறகு கழற்றி வந்தால் மேக்கப் கலைந்து விடும் என்பதால் இந்தமாதிரி நடித்தார்.
ஒன்றரை ஆண்டுகள் தாமத்திற்கு பிறகு காமசூத்ரா 3டி படம் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. படம் இவ்வளவு லேட்டாக முக்கிய காரணமே, இப்படத்திற்கு பணம்போட்டவர்கள், என்னை ஒரு புரோக்கர் போன்றும், நான் நீலப்படம் தயாரிக்கிறேன் என்றும் நினைத்து விட்டார்கள். இந்த பிரச்னைகள் எல்லாம் தான் படத்தின் ரிலீஸை தாமதமாக்கி விட்டனர். மேலும் படத்திற்கு பைனான்ஸ் செய்த சிலர், படத்தில் எவ்வளவு நிர்வாணக் காட்சிகள் இருக்கின்றது என்று கேட்டு நச்சரிக்கிறார்கள், இதனாலும் இந்த படம் தாமதமானது என்றார்.
டிரைலர் வெளியீட்டு விழாவில் காமசூத்ரா படத்தின் கதாநாயகி ஷெர்லின் சோப்ராவும் கலந்து கொண்டார். விழாவில் ரொம்ப கவர்ச்சிகரமான உடையணிந்து வந்திருந்தார். அவர் பேசுகையில், என் அம்மாவும், சகோதரியும் தான் பெரிய விமர்சகர்கள். நான் சரியான விஷயம் செய்தால் என்னை பாராட்டுவார்கள், அதே தப்பு என்றால் விமர்சிப்பார்கள். ஆனால் நான் அதை கண்டுகொள்வது கிடையாது. எவ்வளவு சொல்லியும் நான் கேட்கமாட்டேன், என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது என்பதை உணர்ந்து என் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்கள். நான் என் இலக்கை நோக்கி செல்கிறேன்.
எனது உடற்கட்டை கச்சிதமாக அழகாக வைத்துக்கொள்கிறேன். என் உடம்பை காட்டுவதற்காக நான் வெட்கமோ, தயக்கமோ படவில்லை. இப்போது கவர்ச்சி காண்பிக்காவிட்டால் பின்பு எப்போது காண்பிப்பது. முகத்தில், உடலில் சுருக்கங்கள் எல்லாம் விழுந்த பின்னரா...? என்று நம்மளை கேள்வி கேட்பதோடு, வலைதளத்தில் தனது கவர்ச்சி படங்கள் நிறைய அப்லோடு செய்துள்ளதாகவும் கூறுகிறார்.
காமசூத்ரா, செக்ஸ் படம் அல்ல. வாழ்க்கை வாழும் கலையின் சாராம்சம். நமது பழங்கால சிற்பங்களில் இதை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்றார். மேலும் தன்னை உலக சினிமாவின் ஒரு அங்கங்கமாக எண்ணுவதாவும், பெண்களை வெறும் பொருளாக சித்தரிப்பதை தான் முழுவதும் எதிர்ப்பதாகவும் கூறினார்.
அமெரிக்க பத்திரிகையான பிளே பாய்-ல் நிர்வாணமாக போஸ் கொடுத்த முதல் இந்திய பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.