'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எழில் டைரக்ட் செய்த மனம் கொத்தி பறவை படத்தில் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் ஆளே காணாமல் போனார். இப்போது ராமகிருஷ்ணன் டைரக்ட் செய்து ஹீரோவா நடிக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் காணமல் போனது ஏன் என்பது பற்றி அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
"எங்கப்பா மலையாளத்துல பெரிய டிராமா ஆர்ட்டிஸ்ட். அதனால நடிப்பு என் இரத்திலேயே இருக்கு. நானும் எதிர்காலத்துல நடிகையாகணும்னு முடிவு பண்ணிதான் கேரியரை செட் பண்ணிக்கிட்டேன். எழில் சார் லொக்கேஷன் பார்க்க மூணார் வந்தப்போ அவருகிட்ட அப்போவோட பிரண்ட் என் போட்டாவை கொடுக்க அந்தப் படத்துல ஹீரோயினாயிட்டேன்.
அந்த படம் நல்லா போனதும் நிறைய சான்ஸ் வந்துச்சு. ஆனால் அதுல என்னால நடிக்க முடியாமப்போச்சு. காரணம் எனக்கு மேக்அப் அலர்ஜி இருந்திச்சு. மேக்அப் போட்டால் முகமெல்லாம் சிவந்து வேதனை கொடுக்க ஆரம்பிச்சுடும். அதனால அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க போயிட்டேன். நான் நன்றாக குணமாகி வந்ததும். அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம போயிடுச்சு. அவுங்கள பக்கத்துல இருந்து பார்த்துக்க வேண்டியாதாப்போச்சு. இப்போ அவுங்களும் குணமாயிட்டாங்க. நானும் நடிக்க வந்துட்டேன்.
போங்கடி நீங்களும் உங்க காதலும் வித்தியாசமான காதல் கதை. என்னோட கேரக்டர் எல்லோருக்கும் பிடிக்கும் இந்தப் படம் எனக்கு தமிழ் சினிமாவுல நல்ல இடத்தை கொடுக்கும் ஆண்டவன் அருளால் தொடர்ந்த நடிப்பேன்" என்கிறார் ஆத்மியா.