பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரெயின் டிராப்ஸ் என்ற இளையோர் நடத்தும் (சமூக சேவகம்) அமைப்பு சார்பில் சென்னையில், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இத்துடன் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்களை தேர்ந்து எடுத்து 2014ம் ஆண்டு காலண்டரும் வெளியிடப்பட்டது. இதை இயக்குனர் சிகரம் பாலசந்தர் வெளியிட ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக் கொண்டார். இந்த காலண்டரில் சமூகசேவகி அனுஷ்கா, சமூக ஆர்வலர் அபய்குமார், கர்நாடக பாடகி சுதா ரகுநாதன், சுற்றுபுறத் தூய்மை ஆர்வலர் நிர்மல்,மருத்துவர் கமலா செல்வராஜ், மருத்துவர் மனோரமா, விளையாட்டில் ஸ்ரீகாந்த், விஞ்ஞான துறையில் மயில்சாமி அண்ணாதுரை, பாடகி ரைகானா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
விழாவில் பேசிய பாலசந்தர், நான் இந்த விழாவிற்கு என்னமோ எதோ பண்ணியிருக்காங்க என்று நினைத்து தான் இங்கு வந்தேன். இங்கு வந்து நுழைந்த பிறகு இவர்கள் தந்த வரவேற்பிலேயே தெரிந்தது இவர்கள் பற்றி நான் நினைத்ததை விட 100 மடங்கு சிறப்பாக செய்து இருகிறார்கள் என்று, என் படங்களில் கூட நிறைய சோசியல் மெசேஜ் சொல்லியிருக்கேன், அதனாலே சில படங்கள் ஓடியிருக்கு, சில படங்கள் ஓடாமல் போயிருக்கு. நான் எடுத்த படங்களிலேயே பிடித்த முதல் படம் புன்னகை என்று சொல்வேன். அதில் நல்ல கருத்து இருக்கும், சில இடங்களில் உண்மை சொல்ல விரும்பி இருப்பேன், இங்கு இருக்கும் இளைஞர்களை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன், ஏன் என்றால் உங்கள் வயது பையன்கள் மதுவுக்கு அடிமையாகிறார்கள். பள்ளி படிக்கும் மாணவர்கள் பலர் டாஸ்மார்க்கில் இருக்கிறார்கள். இது எனக்கு புரியல, இந்தியா எங்கே போய் கொண்டு இருக்கிறது, இதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
இதை மாற்ற யார் வர போகிறார்கள்.காந்தி திரும்ப பிறந்து வருவாரா, அப்படி வந்தால் அந்த டி.என்.ஏ. சரியாக இருக்காது, எனக்கு குழப்பமாக இருக்கு, இந்த இளைஞர்களை எப்படி நல்வழி படுத்துவது என்று. இந்த ரெயின் டிராப்ஸ் இளைஞர்களை பார்க்கும்போது ரொம்ப மகிழ்வாக இருக்கிறது. நல்ல சமூக விஷயங்களை செய்கிறார்கள் என்று கேட்கும் போது மன நிறைவை தருகிறது. நான் அவுட்டேட் ஆனவன். இவர்கள் எனக்கு விருதை கொடுத்து இருப்பது எனக்குபெருமை அளிக்கிறது என்றார்.