நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
வேங்கைக்கு பிறகு வீரம் படம் மூலம் வேகமாக கோலிவுட் கோதாவில் வரிந்து கட்டி நிற்கிறார் தமன்னா. நீண்ட நாளைக்குப்பிறகு கிராமத்து நாயகனாக அஜீத் நடிக்கும் இப்படத்தில், பாவாடை தாவணி அணிந்த தேவதையாக வலம் வருகிறாராம் தமன்னா. சிறிய இடைவேளைக்குப்பிறகு தமிழில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தமிழக ரசிகர்களின் மனங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று தனக்கான காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளாராம்.
இப்படத்தில் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவுகளுக்கிடையே பாச மிகுந்த வேடத்தில் அஜீத் நடித்திருக்க, அதே கிராமத்தில் தேவதையாக வளைய வரும் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளாராம். அதனால் அவரது ஓப்பனிங் காட்சியையும் பெரிய அளவில் பில்டப் கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் சிறுத்தை சிவா.
அந்த காட்சியை படமாக்கும்போது சாதாரணமாக ஓடிவருவது போன்று படமாக்கினார்களாம். ஆனால், இப்போது பார்க்கும்போது அவரது காலை காட்டுவது, கையை காட்டுவது. இடையை காட்டுவது என்று கடைசியாக முகத்தை ஓப்பன் செய்கிறார்களாம். இந்த விசயம் இப்போதுதான் தமன்னாவுக்கே தெரிய வந்திருக்கிறதாம்.
தன்னுடன் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களும் பேசும்படியாக இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கும் வழிவிட்டு நடிக்கக்கூடிய அஜீத்தும் இதை வரவேற்றுள்ளாராம். அதனால் எப்படி நயன்தாரா ஆரம்பம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தாரோ, அதற்கும் மேலாக இப்போது வீரம் மெகா ஹிட் படமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறாராம் தமன்னா.
அதோடு, இந்த படத்தில் நான் நடித்துள்ள மகாலட்சுமி வேடத்தில் நடிக்கும்போது, நடிப்பு என்பதை மறந்து இயல்பாகவே மாறினேன். அந்த அளவுக்கு கதையும், கதாபாத்திரமும் எனக்குள் ஊடுருவி என்னை உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்தன என்கிறார் தமன்னா.