டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி. ஆனால், அதன்பிறகு கோடம்பாக்கத்தில் அவருக்கேற்ற சொல்லிக்கிற அளவுக்கு படங்கள் இல்லை. அதனால், தெலுங்கு, கன்னட படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வரும் ப்ரியாமணி, சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் பேசப்பட்ட அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
அதையடுத்து ஆக்சன் கதைகள் பக்கம் கவனத்தை திருப்பிய ப்ரியாமணி, தற்போது சாண்டி என்றொரு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்காக கத்தி சண்டை பயிற்சிகளை எடுத்து சண்டை காட்சிகளிலும் கலக்கியிருக்கிறாராம். அதைப்பார்த்து, தெலுங்கு சினிமாவில் அனுஷ்காவுக்கு வேண்டாதவர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே, ப்ரியாமணியின் நடிப்பை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி வருகிறார்களாம்.
தன்னையும் ஆக்சன் ஹீரோயினியாக சினிமா உலகம் அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ப்ரியாமணி, அடுத்து அனுஷ்காவுக்கு போட்டியாக களத்தில் குதித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதனால் இதுவரை கிளாமர் கதாநாயகியாக ஆந்திராவை கலக்கி வந்த ப்ரியாமணி, இனி ஆக்சனில் கலக்கப்போவது உறுதியாகியிருக்கிறது.