அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திரைப்படத்துறை எனும் சிறந்த கலைத்துறையை தொடர்ந்து கோலோச்ச செய்வதற்கு படத்தயாரிப்புகளை எளிமை படுத்துவதுடன் திட்டமிட்டு சிக்கனமாக செய்வது அவசியம் கார்ப்பரேட் கம்பெனிகள் எனும் ஏகபோக சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய படத்தயாரிப்புகள் நிகழ்ந்து ஆரோக்யமான சூழல் உருவாகி திரைத்தொழிலாளர்களும், தயாரிப்பாளர்களும் நல்லவிதமாக வாழ வழிபிறக்கும்! என்று 'என் ஒவியா' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாருக்கு கோரிக்கை விடுத்தார் வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன். இதன் விபரம் வருமாறு;-
புதுமுகங்கள் நடிக்க கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி நல்லாசியுடன் ரவிராகவ் இசையில் புதியவர் பி. செல்வக்குமாரின் எழுத்து இயக்கத்தில் ஷரவா கிரியேஷன்ஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம், 'என் ஒவியா'. இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, வடபழனி 'ஆர் கே வி' ஸ்டுடியோவில் வெகு விமரிசையாக நடந்தேறியது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் மூத்த இயக்குநர், தயாரிப்பாளர் வி.சி. குகநாதன் வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் தேனிசைத்தென்றல் தேவா, இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ தயாரிப்பாளர் சங்க நிர்வாகி விஜய முரளி, இயக்குநர் விஜய மனோஜ் குமார் மற்றும் 'என் ஓவியா' படக்குழுவினர் கலந்து கொண்ட இவ்விழாவில் பேசிய வணிகர் சங்கத்தலைவர் த. வெள்ளையன் சுவாரஸ்யமாகவும் ,நிறைய நல்விஷயங்களை சுட்டிக்காட்டியும் பேசினார் இனி அவர்., நான் வணிகர் சங்கத்திற்கு தலைவர் என்றாலும் எனக்கு தலைவர் கேயார் தான் காரணம் நானும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர். என் இளவல் புகழேந்திராஜீடன் சேர்ந்து நானும் சில படங்களை தயாரித்துள்ளேன். எனவே இங்கு தலைவர் கேயார் அவர்களுக்கு சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.
இந்த திரைத்துறை என்பது மக்களால் பெரிதும் விரும்பப்படும் துறையாகும். அவ்வாறு விரும்பப்படும் இத்துறையை காப்பரேஷன் கம்பெனிகள் எனும் ஏகபோக சக்திகள் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்திக்கொண்டு சுரண்டி சென்றுவிடலாமல் தலைவர் கேயார் அவர்கள் பாதுகாக்கவேண்டும். தயாரிப்பு செலவுகளை குறைத்து திரைப்படத்தயாரிப்புகளை எளிமை படுத்துவதுடன் திட்டமிட்டு சிக்கனமாக படம் எடுக்க உதவி செய்வதும் அவசியம் அவ்வாறு செய்வதால் 'என் ஓவியா' மாதிரி சிறு படத்தயாரிப்புகள் நிகழ்ந்து ஆரோக்கியமான சூழல் உருவாகும்.. எனும் கோரிக்கையை வலியுறுத்தி 'என் ஓவியா' திரைப்படம் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன் என்றார்.
முன்னதாக இங்கு குடிக்க வைத்த தண்ணீர் பாட்டில் வெளி நாட்டு கம்பெனியைச்சார்ந்தது. அது மாதிரி வெளிநாட்டு கம்பெனி தயாரிப்புகளை திரைத்துறையினர் புறக்கணிக்க வேண்டும். நம் ஊர் நிறுவனங்களின் குடிநீர் களை பயன்படுத்துவது நல்லது என்றும் இங்கு, இந்த விழாவிற்கு இனியவன் என்பவருக்காக தான் வந்தேன் என்றும் அவர் நூறு கிலோ இட்லி, நூறுவித இட்லி.. என உணவு பொருட்களில் புதுமை படைக்க கூடியவர் என்றும் அவர் மாதிரி நம்மவர்களை ஊக்குவிக்கும் விதமாக வெளி நாட்டு தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டுமென்றும் த.வெள்ளையன் பேசி அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து பேச வந்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், வெள்ளையன் சினிமா ஆரோக்யத்திற்காக சில கோரிக்கைகளை விடுத்தார். அவை நல்லவிஷயங்கள்தான். அவை பரிசிலிக்கப்பட்டு, படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவாக 'என் ஓவியா' இசைகுறுந்தகட்டை கேயார், தேவா இருவரும் வெளியிட, வெள்ளையன், 'இந்து மகா சபா' ஸ்ரீ. வி.சி.குகநாதன், விஜய மனோஜ்குமார், விஜயமுரளி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.